Tuesday, March 17, 2009

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்.

நமது ஒரு விரல் அடுத்தவரை சுட்டிக்காட்டும் பொழுது நம்முடைய மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்குகின்றன.

இந்த வரிகள் எவ்வளவு சத்தியமான வரிகள். இந்த வரியின் ஆழத்தை நாம் உணர்ந்தால் அடுத்தவர் மீது நாம் குறைகளை கூற மாட்டோம்.

நாம் அறிவுரை கூறினால் மட்டும் மற்றவர்கள் திருந்தி விடுவார்களா என்ன?

நாம் அறிவுரை சொல்லுவதற்கு முன் நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தனிமனித ஒழுக்கத்தினாலும், பிறர் மீது நாம் செலுத்தும் அன்பினால் மட்டுமே மிகப்பெரிய ஆரோக்கியமான மாற்றங்களை இச்சமுதாயத்தில் படிப்படியாக நம்மால் நிகழ்த்த முடியும்.

- கருத்து கந்தசாமி

Counter