ஊருக்கு செல்லும் நாட்களை எண்ணி விட்டத்தை பார்த்து கொண்டு வாழ்க்கையை நகர்த்தும் ஒருவனின் சோக கதை.
சும்மா ஒரு மூணு மாத பயணமாக என்னை ஆன்சைட் அனுப்பி வைத்தார்கள். எனக்கும் ஆர்வமாக தான் இருந்தது அப்போ.இங்கே வந்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது இது ஒரு ஜெயில் வாழ்க்கை அப்படின்னு.நான் இங்க வந்து சமைக்க கூட கஷ்டபடலீங்க மொக்கை போடுறதுக்கு தாங்க ரொம்பவே கஷ்டபட்டேன்.ஒரு நாள் முழுவதும் உணவு இல்லாம கூட இருந்திடலாம் ஆனா தினமும் நண்பர்களிடமும் அம்மாவிடமும் பேசாம இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்கு.
தனிமை அப்பிடிங்கற தமிழ் சொல்லுக்கு இப்பொழுது தான் என்னால் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்ன பண்றது விதி வலியது என்னை தனிமைப்படுத்தி வாட்டி எடுத்து கொண்டிருக்கிறது.சில பல கட்டாயங்களுக்காக இதை நான் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்.
Showing posts with label சொந்த கதை. Show all posts
Showing posts with label சொந்த கதை. Show all posts
Wednesday, February 4, 2009
Subscribe to:
Posts (Atom)
